×

வீட்டு உரிமையாளருக்கு அடி உதை

கம்பம், ஜூன் 8: கம்பம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அலியார் மகன் ஆஷிக் ராஜா (35). இவரது வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வருபவர் முஸ்தபா மகன் முகமது ஷேக். சம்பவத்தன்று இரவு 10.30 மணிக்கு ஆஷிக் ராஜா தனது வீட்டின் முன்பக்க கேட்டை அடைத்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த முகமது ஷேக், நீ ஏன் கேட்டை பூட்டுகிறாய் என ேகட்டு ஆஷிக் ராஜாவை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த ஆஷிக் ராஜா கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

The post வீட்டு உரிமையாளருக்கு அடி உதை appeared first on Dinakaran.

Tags : Gambam ,Ashiq Raja ,Ambedkar Colony ,
× RELATED திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர், எம்எல்ஏ பிரசாரம்